வரக்காப்பொல பிரிவு இடையிலான விளையாட்டுக் கழகப் போட்டித் தொடர்

49வது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு, வரக்காப்பொல பிரிவிற்கு உட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான போட்டித் தொடரின் இறுதிச்சுற்றுப் போட்டிகள் 2025.03.09 அன்று தோலங்கமுவ மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.

நிகழ்வின் நிறைவில், வெற்றியாளர்களுக்கான பரிசுகளும் சான்றிதழ்களும் வரக்காப்பொல பிரதேச செயலாளர் திரு. ரங்கன சஜீவ அவர்களின் தலைமையிலும், சபரகமுவ மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் திருமதி சதுரங்கிகா பிரேமரத்ன அவர்களின் வழிகாட்டுதலிலும் வழங்கப்பட்டன.

வரக்காப்பொல பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர், அலுவலகத்தின் ஏனைய உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள பலர் ஆகியோரின் பங்கேற்புடன் இப்போட்டித் தொடர் வெற்றிகரமாக நடத்தி நிறைவு செய்யப்பட்டது.

  

 

 

 

News & Events

22
ஜூன்2026
வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026

வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026

வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026 புத்தபெருமானின்...

11
ஜூன்2026
உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22

உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22

உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22...

குடியுரிமை சாசனம்

Scroll To Top