உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22

உலக உயிரியல் பல்வகைமை தினத்தை (மே 22) முன்னிட்டு, வரகாப்பொல பிரதேச செயலாளர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் ஒரு சிறப்பான முன்முயற்சியை மேற்கொண்டனர்.

வரகாப்பொல பிரிவின் கலபிட்டமட பிரதேசத்திற்கு மட்டுமே உரியதும், அழிவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அரிய நன்னீர் மீன் இனமான “பண்டுலா பெத்தியா” (Bandula Barb) பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், எமது அலுவலக உத்தியோகத்தர்களுக்காக விசேட T-Shirt ஒன்று வடிவமைக்கப்பட்டது.

இந்த T-Shirt இல் இடம்பெற்றுள்ள சின்னத்தின் மூலம் “Let’s Protect Bandula Barb” (பண்டுலா பெத்தியாவை பாதுகாப்போம்) என்ற செய்தி சமூகமெங்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் மூலம் உயிரியல் பல்வகைமையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் உள்ளூர் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான சமூகப் பொறுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும், அப்பகுதி மக்களும் மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக, பண்டுலா பெத்தியா மீன்களின் எண்ணிக்கை தற்போது 800-ஐத் தாண்டி அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.

பண்டுலா பெத்தியா” எமது பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பெருமையாகும். எதிர்கால சந்ததியினருக்காக இந்த அரிய இயற்கை மரபைப் பாதுகாப்பது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.

“Let’s Protect Bandula Barb.”
பண்டுலா பெத்தியாவை பாதுகாப்போம்.”

News & Events

22
ஜூன்2026
வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026

வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026

வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026 புத்தபெருமானின்...

11
ஜூன்2026
உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22

உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22

உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22...

குடியுரிமை சாசனம்

Scroll To Top