கேகாலை மாவட்டத்தின் முதல் தேசிய மின்னணு பிறப்புச் சான்றிதழ் வழங்கல்

கேகாலை மாவட்டத்தின் முதல் தேசிய மின்னணு பிறப்புச் சான்றிதழ், 2025 மார்ச் 26 ஆம் தேதி வரக்காப்பொல பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் திரு. ரங்கன சஜீவ அவர்களின் கையொப்பத்துடன் வழங்கப்பட்டது.

தற்போது, 2021 ஆம் ஆண்டிலிருந்து பிறந்த குழந்தைகளுக்கு இந்த தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இது 2006 ஆம் ஆண்டின் இலக்கம் 19 கொண்ட மின்னணு பரிவர்த்தனைச் சட்டத்தின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பதிவு செய்யப்படும் நேரத்திலேயே வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கத்துடன் (NIC Number) இணைந்து, தற்போது பயன்பாட்டில் உள்ள சாதாரண பிறப்புச் சான்றிதழை விட பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக இந்த தேசிய மின்னணு பிறப்புச் சான்றிதழ் அமைந்துள்ளது.

எதிர்காலத்தில், இச் சான்றிதழ் பொதுமக்கள் தங்களது நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேலும் எளிதாகவும் வசதியாகவும் மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

News & Events

22
ஜூன்2026
வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026

வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026

வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026 புத்தபெருமானின்...

11
ஜூன்2026
உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22

உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22

உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22...

குடியுரிமை சாசனம்

Scroll To Top